அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உங்கள் அனைவர்கள் மீதும் ஏக இறைவன் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.
அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், கடந்த ஏழு வருடங்களாக கடும் இன்னல்களுக்கும், பெரும் எதிர்ப்புகளுக்கும் இடையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி கிளையின் மூலம் ஏகத்துவ பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த முயற்சிகளின் மூலம் ஷிர்க்கின் கூடாரமாக திகழ்ந்த பொள்ளாச்சியில் இன்று மாற்றங்கள் ஏற்பட தொடங்கி வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.
முஸ்லிம்கள் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும், அவனைத்தவிர வேறு வேறு எவரையும், வேறு எதையும் வணகக் கூடாது. திருக்குர்ஆனும், நபிகள் நா யகம்(ஸல்) அவர்களின் ஆதாரப்புர் வமான வழிகாட்டுதல் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரமாகும். என்பதை மார்க்க நெறிமுறையாக கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஜனநாயக மு றையிலும் சட்டப்பூர்வமான முறையிலும் பாடுபட்டுவரும் இந்தியாவின் ஒரே அமைப்பான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் - இயக்கத்தின் கீழ் பொள்ளாச்சியில் கிளை தொடங்கப் பட்டு செயல்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு விதிகளின்படி நிர்வாகிகள் தேர் ந் தெடுக்கப்பட்டுசெயல் பட்டு வருகின்றனர்.
இந்த கிளையின் மூலம் பல்வேறு மக்கள் சேவைகள், தெரு முனைப்பிரச்சாரங்கள், மாதத்திற்கு இருமுறை பெண்களுக்கு சிறப்பு மார்க்க சொ ற்பொழிவு நிகழ்ச்சிகள், ரமளானில் திர்ணமும் இரவு சொற்பொழிவு , மக்களிடம் உள்ள அறியாமைகளை அகற்ற தாயிக்கள் மூ லம் 'இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்' நிகழ்ச்சி நடத்துதல், வருடத்திற்கு இருமுறை அங்களுக்கு தர்பியா நல்லொழுக்க பயிற்சி, பெருநாள் திடல் தொழுகை, மாற்றுமத சகோதரர்களிடையே இஸ்லா த்தை அறிய செய்யும் தாவா பணிகள், வட்டியை ஒழிக்க வட்டியில்லா அழகிய கடன் உதவி திட்டம், சமுதாய நலப்பணிகள், அநீதிக்கு எதிராக மக்களின் உரிமைக்காக ஜனநாயக முறையில் ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள், மருத்துவ உதவிகள், ஜகாத் வசுளிக்கப்பட்டு முறையாக விநியோகிக்கப்படுதல், பித்ரா விநியோகம், போன்ற சமுதாய பணிகள் நடைபெற்று வருகின்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி டவுன் கிளைக்கென்று தனியாக தொழுகை நடத்துமிடம் இல்லாமல் மிகவும் கஷ்ட்டப்பட்டு வந்த நிலையில். ஏகத்துவ பிரச்சாரம் எழுச்சியுடன் செயல்பட இப்பொழுது பொள்ளாச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திர்கென்று
இறை இல்லம் அமைக்க 648 சதுர அடியில் இடம், ரூபாய் 14,00,000.00 (பத்திரச் செலவு உட்பட) (பதினான்கு இலட்சம்) மதிப்பில் வாங்க ரூபாய் 1,00,000.00 (ஒரு இலட்ச ரூபாய்) கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிக்காக ரூபாய் 18,00,000.00(பதினெட்டு இலட்சம்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி டவுன் கிளைக்காக பள்ளிவாசல் கட்டுவதற்கு இடம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளஇடத்தை பார்வையிட தமிழ் நாடு தவுஹீத் ஜமாஅத் மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் கடந்த 10 ந்தேதி ஆகஸ்ட் 2011, புதன்கிழமை வருகை தந்து இடத்தை பார்வையிட்டார்கள்.
இங்கு இறை இல்லம் அமைக்க மொத்தம் சுமார் ரூபாய் 32,00,000.00 (முப்பத்தி இரண்டு இலட்சம்) வரை தேவைப்படும் நிலையில் இஜ்ஜமாத் இருக்கின்றது.
இந்த ஜமாத்த்தில் இருப்போர் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாக இருப்பதால்
இந்த தொகை முழுவதும் நன்கொடைகளாக பெற்றே இப்பணிகளை செய்ய வேண்டியதுள்ளது.
ஆகவே, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தாங்களால் இயன்ற அளவு நன்கொடைகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அதற்குரிய நற்பலன் உங்களுக்கு பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும். நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:272)
அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அது போன்ற ஒன்றை சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என உஸ்மான் (ரலி) அவர்கள் கூறிகிறார்கள். (நூல் : புகாரி 450)
நன்கொடை
வங்கிக்கணக்கு எண்
______________________________________________
TAMILNADU THOWHEED JAMAATH
Karur Vaisya Bank, Pollachi Branch
IFSC Code No: KVBL0001181
_____________________________________________________________________
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
______________________________________________
TAMILNADU THOWHEED JAMAATH
Account No:
1181 115 00000 8031Karur Vaisya Bank, Pollachi Branch
IFSC Code No: KVBL0001181
_____________________________________________________________________
டிடி / காசோலை அனுப்பவேண்டிய முகவரி
_____________________________________________________________________தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
பொள்ளாச்சி கிளை
C/o. அஸில் சூயிங் டிரேடர்ஸ்
91, தெப்பகுளம் வீதி, பொள்ளாச்சி 1.
கோயம்புத்தூர் மாவட்டம்,
தமிழ் நாடு,
இந்தியா.
தொடர்புக்கு:
98940 57272 / 97879 04581 / 94429 53728