பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி

சூலேசுவரன்பட்டி 9/10/11,

பொள்ளாச்சி மற்றும் சுலேசுவரன்பட்டி கிளைகள் சார்பாக கடந்த 9 ந்தேதி (09/10/2011) ஞாயிற்றுக்கிழமை, சுலேசுவரன்பட்டியில் பெண்களுக்கான தர்பியா நல்லொழுக்க பயிற்சி நடைபெற்றது. இதில் சகோதரர் M.I. சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு 'ஈமானில் உறுதி' என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.



அதைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், மதரசா தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு சகோதரர் M.I. சுலைமான் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.