ராகம் போட்டு பாங்கு சொல்லலாமா?


தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் பாங்கு நீட்டிச் சொல்லப்பட்டு வருகின்றது. இவ்வாறு பாங்குசொல்லி முடிப்பதற்குப் பலநிமிடங்கள் தேவைப்படுகின்றன.


பாங்கை நீட்டிச் சொல்லவேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. பாங்கு என்பது தொழுகைக்கான அறிவிப்பாகும்.

பொதுவாக எந்த ஒரு அறிவிப்பானாலும் அதை நீட்டாமல் சாதாரணமாகச் செய்வதே சரியான முறை.இவ்வாறே பாங்கு என்ற அறிவிப்பையும் சாதாரணமாகச் செய்யவேண்டும்.

வாசிக்கும் போது எங்குநீட்ட வேண்டும்? எங்குநீட்டக் கூடாது?
என்றுவிதி முறைகள் அரபுமொழியில் உள்ளது.  அரபுமொழியில் அமைந்தபாங்கு இந்தவிதி முறைகளுக்கு உட்பட்டு சொல்லப்பட்டால் அதில் தவறில்லை. ஆனால் நடைமுறையில் பாங்கு இந்தவிதி முறைகளுக்கு உட்பட்டு சொல்லப்படுவதில்லை. பாங்கு சொல்பவர்தான் விரும்பிய இடங்களில் தன் விருப்பப்படி நீட்டிக் கொள்கிறார்.

உதாரணமாக அல்லாஹு என்றுகூற வேண்டிய வார்த்தையை அல்லா...........................
என்று சிலமணித்துளிகள் நீட்டிபிறகு  ஹு என்று கூறுகிறார்.
இது அரபு மொழியில் இல்லாதவழக்கு முறை.
ஒருவார்த்தையைஅம்மொழிவழக்கிற்குமாற்றமானமுறையில்உச்சரித்தால்அதுகேலியாகவும்கிண்டாலாகவும்அமையும்.


மேலும்பாங்குசொல்வதுஒருவணக்கமாகும்.அதைச்சொல்பவருக்கும்அதைக்கேட்டுபதிலுரைப்பவர்களுக்கும்மார்க்கஅடிப்படையில்சிறப்புகள்இருக்கின்றது.
வணக்கமாக இருக்கின்ற இந்தக் காரியத்தைச் சரியாகவும் சிறப்பாகவும் செய்யவேண்டுமே தவிர கேலிக்குரியதாகஆக்கிவிடக்கூடாது.

முஅத்தின் பாங்கு சொன்னால் அதைக் கேட்பவர்கள் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று மார்க்கம் கூறுகின்றது.
பாங்குதேவையின்றிநீட்டப்படும் போது பதிலளிப்பவர் அதற்காக நீண்ட நேரம்காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பாங்கு சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இடையில் பேச வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது.
நீட்டாமல் சாதாரண அறிவிப்பைப் போன்று பாங்கு கூறப்பட்டால் இது போன்ற சிக்கல் ஏற்படாது.

பாங்கில் ராகம் போடுவது கட்டாயமனதல்ல.
ராகத்துடன் சொன்னாலும் ராகம் இல்லாமல் சொன்னாலும் அதில் தவறேதுமில்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக நீட்டப்படுவது அறவே தவிர்க்கப்பட வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகத்தில் இருக்கும் பள்ளிவாசல்களிலும் கூட பாங்கை நீட்டி முழக்கி கொலை செய்யப்படுகிறது. அந்தந்த பகுதியில் உள்ள பிரச்சாரகர்களும் நிர்வாகிகளும் இதில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.