நற்செய்தி !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

இறைவனின் மகத்தான கிருபையால் பொள்ளாச்சி நகரில் தவ்ஹீத் மார்கஸ் பள்ளிவாசல்  'மஸ்ஜிதுல் ஹக் '  டிசம்பர் 7 ஆம், 2012ல்  வெள்ளிக்கிழமை  ஜும்ஆவுடன் செயல் பட தொடங்குகிறது. அனைத்தையும் சிறப்பாக்கிவைத்த அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.



ஜும்மா உரை: மாநில பேச்சாளர் சகோதரர். முஹம்மது தாஹா அவர்கள் 
தலைப்பு : ஜும்ஆ வை அலங்கரித்தல் 

***அனைவர்களும் வருக***

அன்று அசர்  முதல் மக்ரிப் வரை பெண்களுக்கான சிறப்பு 'இஸ்லாம் ஒரு  எளிய மார்க்கம்'  கேள்வி பதில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்: மஸ்ஜிதுல் ஹக், பொள்ளாச்சி. 

பொள்ளாச்சி நகரில் தவ்ஹீத் பள்ளிவாசல் அமைக்கப்பட பொருளாலும், மனதாலும், உடலாலும் உழைத்திட்ட  அனைத்து நல்  உள்ளங்களுக்கும் அல்லாஹ் மிகப்பெரிய நற்கூலி இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும  வழங்குவானாக.