பொள்ளாச்சியில் மதரசா துவக்கம், அல்ஹம்துலில்லாஹ்.


கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுலேசுவரன்பட்டி கிளை சார்பாக மதரசா நடத்தப்பட்டுவருகிறது. இதன் மூலம் ஏராளமாம மாணவ , மாணவிகள் மார்க்கக் கல்வி கற்று பயன் பெற்றுவர்கின்றனர். 


இப்பொழுது பொள்ளாச்சி நகரின் கிளை சார்பாக அப்பகுதி மக்களுக்காக  மஸ்ஜிதுல் ஹாக்  பள்ளியில்  05/03/2012.அன்று புதிய மதரசா துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .தற்போது 23  மாணவ ,மாணவிகள் பயன் பெறுகின்றனர். 


மதரசா வில் சிறுவர்களுக்கு மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் இப்பொழுது 15 பேர் வரை சேர்ந்துள்ளனர்.