தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி சுலேசுவரன் பட்டி கிளை செய்திகள்:

அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி சுலேசுவரன் பட்டி கிளை சார்பாக ரமலான் முழுவதும் இரவு தொழுகை சிறப்பாக நடைபெற்று வந்தது அல்ஹம்துலில்லாஹ்.

 தொழுகை முடிந்து தொடர் சொற்பொழிவுகளும் நடை பெற்று வந்தது. கடைசி பத்து  நாட்களில் ஒற்றை படை இரவுகளில், இரவு முழுவதும் சிறப்பான முறையில் சரியான முறையில் அமல்களில்  ஈடுபட வசதிவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.  மக்களுக்கு  மிக  பயனுள்ளதாக  இருந்தது.  ஒவ்வொரு ஒற்றை படை இரவிலும்  சிறப்பு பயான்களும், செயல் விளக்கங்களும் நடை பெற்று வந்தது.


இதன் தொடர்ச்சியாக கடைசி ஒற்றை படை இரவில், சகோ. யஹ்யா  அவர்கள்  'ஜனாஸா சட்டங்கள்'  என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள். அதை தொடர்ந்து  ஜனாஸா  குளிப்பாட்டுவது,  கபன் இடுவது  போன்றவைகள்  செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இது மக்களுக்கு  மிகவும் பயனுள்ளதாக இருந்தது.